×

கொரோனா விழிப்புணர்வு அஜித் வசனத்தை பயன்படுத்திய காவல் துறை

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக தமிழகத்தில் பரவி வருகிறது. இது குறித்த விழிப்புணர்வை அரசு மற்றும் காவல்துறையினர் சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் தேனி மாவட்ட காவல் துறையினர் தங்களது சமூக வலைத்தளத்தில் அஜீத் நடித்த மங்காத்தா படத்தின் காட்சி ஒன்றை பயன்படுத்தி கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். அஜீத் நடித்த படம் ஒன்றில் ‘கொஞ்ச நாள் எல்லாரையும் அவங்கவங்க வீட்டுல இருக்க சொல்லுங்க’ என்ற வசனத்தை பதிவுசெய்து அதன்பின்னர் ‘மங்காத்தா’ படத்தில் அஜித் வீட்டில் ஓய்வு எடுப்பது போன்ற காட்சியையும் தேனி காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது அஜித் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு, வைரலாகி வருகிறது.

Tags : police department ,Corona Awareness Ajith , Corona, Ajith, Police, Curfew
× RELATED பெருநகர காவல் மோப்ப நாய் பிரிவுக்கு...