கொரோனா தொற்று பரவாமல் தடுக்க விளையாட்டு வீரர்களும் பலரும் முதல்வர் நிவாரண நிதி, பிரதமர் பாதுகாப்பு நிதி ஆகியற்றுக்கு தாராளமாக நன்கொடை வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் ஹாக்கி விளையாட்டின் நட்சரத்திர நாயகன், முன்னாள் வீரர் தன்ராஜ் பிள்ளை 5 லட்சம் ரூபாயை பிரதமர் பாதுகாப்பு நிதிக்கு அளித்துள்ளார். பேட்மின்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப் 3 லட்சம் ரூபாயை தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அதேபோல் முன்னாள் பேட்மின்டன் வீரரும், இந்திய அணியின் பயிற்சியாளருமான புல்லேலா கோபிசந்த் 15 லட்சம் ரூபாயை பிரதமர் பாதுகாப்பு நிதிக்கும், தலா 5 லட்சம் ரூபாயை ஆந்திரா, தெலங்கானா மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்தார். பில்லியர்ட்ஸ் உலக சாம்பியன் பங்கஜ் அத்வானியும் 5 லட்சம் ரூபாயை பிரதமர் பாதுகாப்பு நிதிக்கு அளித்துள்ளார்.