×

வீட்டு கழிவறையில் விஷவாயு தாக்கி வாலிபர் சாவு

கோவை: கோவை பீளமேடு ஹட்கோ காலனி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீதர் (75). இவரது மனைவி பத்மாவதி (70). இவர்களுக்கு பாலாஜி (48), முரளி (45) என 2 மகன்கள். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. நேற்று அதிகாலை 2.30 மணியளவில் ஸ்ரீதர் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது,  கழிவறை முழுவதும் பரவியிருந்த விஷ வாயு தாக்கியதில் மயங்கி விழுந்தார். நீண்ட நேரமாகியும் தந்தை வெளியில் வராததால் கழிவறைக்கு சென்ற மகன்கள் முரளி, பாலாஜியும் மயங்கி விழுந்தனர். அக்கம் பக்கத்தினர் வந்து மூவரையும் கழிவறையில் இருந்து மீட்டனர். இதில், பாலாஜி இறந்துவிட்டது தெரியவந்தது.  கழிவறை மற்றும் சிறிய ஜெனரேட்டரில் இருந்து விஷவாயு வெளியேறி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Tags : toilet attacker , toilet, attacker, dies , toilet
× RELATED தமிழகத்தில் 3 மாவட்டங்களில் காலை 10 மணி...