சென்னை: சென்னையில் உள்ள பாரதி கலைக் கல்லூரியில் ரேபிட் கிட் மூலம் கொரோனா சோதனை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு 6,000 ரேபிட் கிட் கருவிகள் தரப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். மேலும் ரேபிட் கிட் மூலம் 15 நிமிடங்களில் பரிசோதனை முடிவை தெரிந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.