×

மனைவி சரமாரி குத்தி கொலை: கணவன் கைது

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஜிஆர் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (44). கொத்தனார். இவரது மனைவி புஷ்பா (40). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன் பிளஸ் 2 படிக்கிறான். மகள்களுக்கு திருமணமாகி கணவன் வீட்டில் உள்ளனர். புஷ்பா சில மாதங்களாக அடிக்கடி செல்போனில் சிரித்து பேசியுள்ளார். இதனல், சந்தேகமடைந்த ரமேஷ், மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருக்கும் என நினைத்து அடிக்கடி தகராறு செய்துள்ளார். சில நாட்களாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேறொருவருடன் புஷ்பா தனிமையில் இருந்ததாக ரமேஷுக்கு தெரிந்தது. இந்நிலையில், இவர்களது மகன் நேற்று முன்தினம் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதையடுத்து மனைவியுடன் ரமேஷ் அன்று இரவு வாய்த்தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த ரமேஷ், நேற்று அதிகாலை 3 மணியளவில் எழுந்தார். அப்போது, அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த புஷ்பாவை கழுத்தில் கத்தியால் சரமாரி குத்தியுள்ளார். வலி தாங்கமுடியாமல் புஷ்பா அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அங்கு, ரத்த வெள்ளத்தில் புஷ்பா சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து கவரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, ரமேஷை கைது செய்தனர். பின்னர் சடலத்தை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Husband ,arrested ,murdering, wife
× RELATED மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு...