சென்னை,: தமிழ்நாடு கோயில் மனையில் குடியிருப்போர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோயில் மனைகளில் குடியிருப்பவர்களில் பெரும்பாலோனோர் ஏழை எளிய நடுத்தர மக்கள். இவர்களின் வாழ்வாதாரம் ஊரடங்கால் பெருமளவில் பாதிக்கப்பட்டு அன்றாட தேவைகளுக்கே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே தமிழக முதல்வர் கோயில் மனைகளில் குடியிருப்போர்களின் நிலையை கருத்தில் கொண்டு இயல்பு நிலை திரும்பும் வரை இவர்கள் கோயிலுக்கு செலுத்தும் வாடகையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.