×

இயன்றவற்றை செய்தேன் திருப்தியுடன் செல்கிறேன்: எஸ்.ஏ.பாப்டே உருக்கம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே, கடந்த 2019 நவம்பரில் பதவியேற்றார். இவர் நேற்று ஓய்வு பெற்றார். கடைசியாக நேற்று இவர், ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் பிரிவை திறக்க அனுமதி கோரும் வேதாந்தா  நிறுவனத்தின் மனுவை விசாரித்தார். உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு நடத்தப்பட்ட பணி நிறைவு விழாவில் பேசிய அவர், “இதற்கு முன்பு பணி ஓய்வு, பிரிவு உபசார விழாவில் கலந்துகொண்ட போது, கூற வந்ததை தெளிவாக கூறியுள்ளேன். ஆனால், இன்று என் மனதில் அனைத்து உணர்வுகளும் கலவையாக நிறைந்துள்ளன. அதனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நல்ல நினைவுகளுடன், மகிழ்ச்சியாக இந்த நீதிமன்றத்தை விட்டு செல்கிறேன். என்னால் இயன்றதை செய்தேன். அந்த திருப்தியுடன் செல்கிறேன்,’’ என்றார்….

The post இயன்றவற்றை செய்தேன் திருப்தியுடன் செல்கிறேன்: எஸ்.ஏ.பாப்டே உருக்கம் appeared first on Dinakaran.

Tags : S.A. Bapde Urukkam ,New Delhi ,Sharad Arvind Bapde ,47th Chief Justice of ,Supreme Court ,S.A. Babde Urukkam ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...