×

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 84 வயது மூதாட்டி உள்ளிட்ட 3 பேர் குணமடைந்தனர்: ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதேபோன்று சென்னையில் கொரோனா பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மறுபக்கம் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் 44 பேர் குணமடைந்துள்ளனர். இதில் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பொழிச்சலூரைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி சில நாட்களுக்கு முன்பு குணமடைந்தார். இந்நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மூவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 84 வயது மூதாட்டி, 54 வயது பெண், 25 வயது இளைஞர் உள்ளிட்ட மூன்று பேர் குணமடைந்தது நேற்று வீடு திரும்பியுள்ளனர். இவர்களை மருத்துவமனை டீன் உள்ளிட்ட ஊழியர்கள் வழியனுப்பி வைத்தனர். இவர்கள் அனைவரும் 24 நாட்கள் தனிமையில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kilpauk Hospital ,Corona , 84-year-old granddaughter of Kilpauk Hospital, Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...