டெல்லி: ஊரடங்கை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் ஏப்ரல் 15ம் தேதிக்குள் 8.2 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கட்டுப்பாடு மட்டுமென்றால் 1.2 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஊரடங்கால் ஏற்பட்ட நன்மை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.