டெல்லி: ஏப்ரல் 14-க்கு பிறகு ஊரடங்கை நீட்டிக்க மாநில அரசுகள், வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஊரடங்கை நீட்டிப்பது பற்றி அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஒவ்வொருவரின் உயிரையும் காப்பாற்றுவதே அரசுக்கு முக்கியம் என கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.