×

கொரோனா தடுப்பு பணிகளுக்காக அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம்

சென்னை:  தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அரசாணை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினர் தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அந்தந்த ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் கடிதம் வந்துள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் மாதத்தில் அரசு பணியாளர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்.

இதற்கு வரிவிலக்கு உண்டு. ஒரு நாளுக்கு மேல் சம்பளத்தை வழங்க விரும்பினால், அதற்கும் அனுமதி தரலாம். உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், வாரியம் மற்றும் மாநகராட்சி, நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களின் தொகுப்பூதிய ஊழியர்கள் விருப்பத்தின் பேரில் சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : servants ,Corona , Corona, civil servants, one day salary, Government of Tamil Nadu
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து