டெல்லி : கட்டுமான தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி பிரதமருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து கட்டிடத் தொழிலில் ஈடுப்பட்டுள்ளதாகவும் மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதால் கட்டுமான தொழிலாளர்கள் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டு இருப்பதாகவும் சோனியா காந்தி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.