×

ஐகோர்ட் வளாகத்தில் கூட்டம் கூட வேண்டாம்: தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி வேண்டுகோள்

சென்னை: கொரோனா வைரஸ் பரவாமலிருக்க உயர் நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் கூட வேண்டாம் என்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பாது காப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கூட்டமாக இல்லாமல் இருப்பதும், பிறரிடம் இருந்து தள்ளியிருப்பதும்தான் கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கு தீர்வு என்பதால் உயர் நீதிமன்ற வளாகத்தில்  வக்கீல்கள், வழக்காடிகள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் கூட வேண்டாம்.

இந்த கடமை மற்றும் பொறுப்பு அரசாங்கத்தை மட்டும் சார்ந்ததல்ல. சமூகம் அதிலும் குறிப்பாக தனி நபரை சார்ந்தது என்பதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



Tags : Sahi ,AP ,meeting ,campus , iCord campus,meeting, Chief Justice AP, Sahi appeals
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?