×

கொரோனா சோதனை தீவிரப்படுத்த வேண்டும்: டிவிட்டரில் ராமதாஸ் பதிவு

சென்னை: கொரோனா சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டர் பதிவில் கூறியுள்ளார். இதுகுறித்து டிவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வருபவர்களுக்கு மட்டும்தான் கொரோனா  ஆய்வு நடத்தப்படுகிறது.

இந்த சோதனையை உள்ளூரில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் உள்ளவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும். அதிக மக்கள் கூடும் அரசு அலுவலகங்கள்,  வாராந்திர சந்தைகள் ஆகியவற்றுக்கும் விடுமுறை அளித்து அரசு ஆணையிட வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நோய் தடுப்புக்கு இது உதவாது. நோய் தொற்று  ஏற்படுவதை தடுக்க, பொதுத்தேர்வு பணியில் உள்ளவர்கள் தவிர மற்றவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : Corona ,Ramadas ,Trial , Corona, Trial, Ramadas
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...