×

ஏ... ஓடியா... ஓடியா... குடிச்சா வராது 150 ஜூஸ் குடிக்காட்டி போகாது: கொரோனா ஜூஸ் விற்ற இங்கிலாந்து முதியவருக்கு போலீஸ் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்  அருகே ெகாரோனா வைரஸ் எதிர்ப்பு ஜூஸ் என்ற பெயரில் ஜூஸ் விற்ற இங்கிலாந்து முதியவரை போலீசார்  எச்சரித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ெகாரோனா வைரஸ்  பீதி தற்போது உலகம் முழுவதும் நிலவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை  மருந்து  கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால் நோயை தடுக்கும் என்று கூறி பல  உணவு வகைகள் குறித்து  சமூக வலை தளங்களில் தகவல்களை பரப்பி வருகின்றனர்.   இந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே வர்க்கலாவில்  நிரந்தரமாக தங்கியுள்ள  இங்கிலாந்தை சேர்ந்த ஒரு 60 வயது முதியவர்  ஒரு ஜூஸ் கடை நடத்தி வருகிறார்.

 இஞ்சி, எலுமிச்சை, நெல்லிக்காய் சேர்த்து தயாரித்த ஜூஸை 150க்கு  விற்பனை செய்து வந்தார். இது கொரோனா வைரஸ் எதிர்ப்பு ஜூஸ் எனவும் கூறி  வந்தார்.  இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார்  விரைந்து சென்று அந்த  முதியவரிடம் விசாரணை நடத்தினர். இதுபோல கூறி ஜூஸ் விற்பனை  செய்யக்கூடாது  என்று அவரை எச்சரித்து சென்றனர்.



Tags : UK ,Corona , Corona, England old man
× RELATED கோடிக்கணக்கான நன்கொடைக்காக...