அண்ணாநகர்: இன்ஸ்டாகிராமில் இளம்பெண்களின் பெயரில் போலி கணக்கு தொடங்கி ஆபாசமாக பேசி பணம் பறிக்கும் சம்பவங்கள் சமீபகாலமாக அடிக்கடி நடக்கிறது. இந்நிலையில், கோயம்புத்தூர் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியதாவது: என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். ஐ.ஏ.எஸ். பயிற்சி படிப்புக்காக திருமங்கலம் பகுதியில் தங்கி படித்து வருகிறேன். தனது பெயரையும், புகைப்படத்தையும் பயன்படுத்தி ஒருவர் இன்ஸ்டகிராம் மூலம் போலியான கணக்கு தொடங்கியுள்ளார். எனவே அந்த மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார்.