- ஆர்ப்பாட்டம்
- கோட்டை
- வள்ளுவர்
- அனைத்து மத நில பயன்பாட்டு பாதுகாப்பு சங்கம்
- அமைப்புக்கள்
- அறிவிப்பு
- வள்ளுவர் கோட்டை
- மத அமைப்புகளை மறுப்பது 14 வது ஆர்ப்பாட்டம்
சென்னை: மதவாத அமைப்புகளை கண்டித்து வரும் 14ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்க மாநில அமைப்பாளர் சாமி.நடராஜன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களுக்கு 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நஞ்சை, புஞ்சை, மானாவாரி நிலங்களும், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடிமனைகளும், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு கடைகளும் உள்ளன. இவற்றை பயன்படுத்துபவர்கள் 95 சதவீதம் பேர் சாதாரண ஏழை இந்து மக்களே, இவர்களுக்கு தற்போது அறநிலையத்துறை வாடகை, குத்தகையை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
தமிழக அரசு கடந்தாண்டு அக்டோபரில் அரசாணை 318ஐ வெளியிட்டது. அதில் தொடர்ந்து 5 ஆண்டுகள் கோயில் இடத்தில் குடியிருக்கும் ஏழைகளுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டது. தமிழக அரசின் உத்தரவை செயல்படுத்த கூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளனர். வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்கள் 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் வெறும் 600 ஏக்கர் நிலத்தை மட்டுமே அரசு கையகப்படுத்த உள்ளது. இந்த நிலங்களுக்கும் சந்தை மதிப்பை விட 3 மடங்கு சேர்த்து விலை கொடுத்து வாங்கி சுமார் 20 ஆயிரம் ஏழைகளுக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதை பொறுத்துக் கொள்ள முடியாத பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என மிரட்டும் வகையில் பாஜ தலைமை அலுவலகத்திலிருந்து செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார். கோயில் இடத்தில் குடியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்கும் அரசின் திட்டத்தை எதிர்ப்பதோடு, பெரும்பான்மை இந்து மக்களுக்கு எதிராக செயல்படும் எச்.ராஜா உள்ளிட்ட இந்துத்துவா சக்திகளை தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். எனவே, மதவாத அமைப்புகளை கண்டித்து வரும் 14ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.