×

சென்னை சூளைமேட்டில் இரண்டு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு

சென்னை: சென்னை சூளைமேட்டில் இரண்டு கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் அரிவாளால் தாக்கிக் கொண்டதால் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மோதலில் மாநிலக் கல்லூரி மாணவர் ஒருவரின் மண்டை உடைந்து, அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை திருமங்கலத்தை சேர்ந்த நேரு என்ற மாணவர் தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பைக்கில் சென்று கொண்டிருந்த மாணவர் நேருவை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : Chennai ,colleges , Chennai Choolamedu, College Students, Conflict
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...