×

ஆவடி, அம்பத்தூர் பகுதியில் சிடிஎச் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து; உயிரிழப்பு

ஆவடி: ஆவடி, அம்பத்தூர் பகுதியில் சி.டி.எச் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நடக்கிறது. சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்லும் சிடிஎச் சாலையில், பாடி, அம்பத்தூர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர், திருமுல்லைவாயில், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ப பல ஊர்கள் உள்ளது. இந்த சாலையை பயன்படுத்திதான் ஆவடியில் டேங்க் பேக்டரி, படைத்துறை உடை தொழிற்சாலை, போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இன்ஜின் பேக்டரி, மத்திய வாகன கிடங்கு, விமான படை பயிற்சி மையம், மத்திய போலீஸ் பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே பணிமனை, தமிழ்நாடு சிறப்பு காவல் படைகள், இந்திய உணவு கிடங்கு ஆகியவற்றிற்கு செல்ல வேண்டும். இதனால் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் காணப்படும்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது; பாடி முதல் திருநின்றவூர் வரை பல இடங்களில் சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் குறுகலாக உள்ளது. ஆவடி பகுதியில் சிடிஎச் சாலையோரங்களில் அமரர் ஊர்திகளை நிறுத்துகின்றனர். வணிக நிறுவனங்கள் முன் கார், பைக்குகளை நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர் பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆவடி சி.டி.எச் சாலையில் உள்ள தனியார் இரும்பு பைப் தயாரிக்கும் நிறுவனம் முன்பு அடிக்கடி சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சிடிஎச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக பாதசாரிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே, சிடிஎச் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர்.



Tags : road ,Accident ,Ambattur ,CDH ,Avadi ,Death , Avadi, Ambattur, CDH Road, Accident
× RELATED சுந்தராபுரம்-மதுக்கரை சாலை பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து