நத்தம்: சேதமடைந்த நிலையில் உள்ள நத்தம்-செந்துறை சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தத்திலிருந்து செந்துறை செல்லும் சாலையில் நேரு நகர், செல்லம்புதூர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
டூவீலர்களில் செல்வோர் அடிக்கடி தவறி விழுந்து காயமடைகின்றனர். வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இப்பகுதியில் சேதமடைந்த நிலையில் உள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.