×

டிக்டாக் காதல் மன்னன் கண்ணன் பற்றி ‘பகீர்’ தகவல்கள்: வசீகர பாடல்களுக்கு நடனமாடி கல்லூரி மாணவிகளை வீழ்த்தினார்: வலையில் சிக்கிய இளம்பெண்களை விசாரிக்க போலீஸ் திட்டம்

நெல்லை: நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களின் போட்டோவை ஆபாசமாக மார்பிங் செய்து டிக் டாக் வீடியோ பதிவேற்றம் செய்ததாக வாலிபர் கைதான நிலையில், தலைமறைவான அவரது தம்பி மற்றும் நண்பர்களை தேடி வரும் போலீசார், அவரோடு பாடல்களில் நடித்த இளம்பெண்களை விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே கூலிபத்து அருணாசலபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (19). இவர் 9ம் வகுப்பு வரை படித்துள்ளார். பள்ளிக்கு செல்லாமலும், வேலைக்கு செல்லாமலும் ஊர் சுற்றி வந்த இவர் டிக்டாக் செயலி மூலம் ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். ‘kannansnkr’ என்னும் ஐடியில் இவர் பதிவிட்ட பாடல்கள் இவரை மன்மத ராசாவாக மாற்றியது. இளம்பெண்கள் இவரை ‘காதல் மன்னன் கண்ணன்’ என வாயார அழைத்தனர்.

டிக்டாக்கில் தனது ஐடியில் 947 வீடியோக்களை பதிவேற்றம் செய்து, குறுகிய காலத்தில் 4.18 லட்சம் பின்தொடரும் ரசிகர்களை பெற்றார். ஊஞ்சலில் ஆடியபடியே ‘ஏ கண்ணாடி உடம்பு’ என இவர் பாடிய பாடல் சுரண்டை வட்டாரத்தையே சுண்டியிழுத்தது. ‘பிரம்மனுக்கு மூடு வந்து உன்ன படைச்சிட்டான், காமனுக்கு மூடு வந்து என்னை அனுப்பிட்டான்’ என்ற பாடலுக்கு டிக்டாக்கில் இவர் செய்த நளினங்கள், கல்லூரி மாணவிகளின் பல நாள் தூக்கத்தை கெடுத்தது.  இவரது டூயட் பாடல்களும், அதில் வரும் இளமை துள்ளாட்டமும் இவரை ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தின.

சில பாடல்களில் தன்னை ஒரு நடன சூறாவளியாக மாற்றிக் கொண்ட, இவரது தோற்றமும், பேச்சும் இளம்பெண்களை கிறங்கடித்தது. டிக்டாக் மூலம் தன்னிடம் பழகிய பெண்களிடம், மெல்ல மெல்ல பேச்சு கொடுத்து காதலிப்பது போல் நடித்துள்ளார். சில பெண்களிடம் தான் தென்காசியில் உள்ள ஒரு கல்லூரியில் படிப்பதாகவும் கூறி கொண்டு, புதிய பாடல்களை பதிவேற்றம் செய்துள்ளார். சுரண்டை பக்கத்து கிராமங்களில் நடந்து செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் இளம்பெண்களை அவர்களின் அனுமதியின்றி வீடியோ எடுத்து டிக்டாக்கில் கண்ணன் பதிவு செய்தார். தொடர்ந்து அவரது பாடலுக்கு லைக் போடும் பெண்களிடம் நைசாக பேச்சு கொடுத்து, அவர்களிடம் வீடியோ சாட்டிங்கும் செய்தார். காலப்போக்கில் அப்பெண்களையும் டிக்டாக்கில் ஏற்றி, வசீகரிக்கும் பாடல்களை அதில் பதிவேற்றம் செய்தார்.

‘மதுர மரிக்கொழுந்து வாசம்’ உள்ளிட்ட பாடல்கள் மூலமாக இவர் கிராமத்து பெண்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களையும் கபளீகரம் செய்து தனக்கு ரசிகனாக்கி கொண்டார். தன்னிடம் நெருங்கி பழகிய சில பெண்களின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்களை வைத்துக் கொண்டு இறுதியில் கண்ணன் பேரம் பேசத் தொடங்கியபோது, பிரச்னை எழுந்தது. வீட்டுக்கு தெரியாமல் கண்ணனின் ரசிகையாக இருந்த பல பெண்கள், சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் தவித்தனர். தென்காசி மாவட்டத்தில் ஒரு கல்லூரி மாணவி அவர் கேட்ட பணத்தை தரமுடியாமல், தனது நகையை கழற்றி கொடுத்து விட்டு, ‘இத்தோடு பிரச்னையை முடித்துக் கொள்வோம்’ என கை கழுவி விட்டு ஓடிச் சென்ற சம்பவமும் நடந்தேறியது. பணம் தராத சில இளம் பெண்களை ஆபாசமாக மார்பிங் செய்து போட்டோக்களை வௌியிட்டுள்ளார்.

கடந்த 4 தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் கடற்கரை சென்ற கண்ணன் அந்த சூழலுக்கு ஏற்ப ‘வா முனிம்மா வா. நீயும், நானும் ஜோடி, சும்மா பீச்சு பக்கம் வாடி’ என்ற பாடலை பாடி தனது ரசிகைகளிடம் லைக்குகளை அள்ளினார். அதை தொடர்ந்து சுரண்டை வட்டாரத்தில் திருமணமாகி 2 குழந்தைகளின் தாயான ஒரு பெண்ணிடம் தனது கைவரிசையை காட்டியுள்ளார். டிக்டாக் மோகம் கொண்டு திரிந்த அப்ெபண்ணும், கேட்ட பணத்தை கொடுக்க முடியாமல் திகைத்ததோடு, குடும்பத்தினரிடம் சொல்ல முடியாமல் தவித்துள்ளார். காதல் மன்னன் கண்ணனோடு டிக்டாக்கில் பாடிய ஒரு கல்லூரி மாணவியை, அவளது பெற்றோர் வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இத்தனை பிரச்னைகளும் அரங்கேறிய பின்னரே, கல்லூரி மாணவியின் புகாரின் பேரில் சேர்ந்தமரம் காவல்துறையினர் கண்ணனை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் கண்ணனுக்கு உறுதுணையாக இருந்த அவரது தம்பி மற்றும் 2 நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் கண்ணன் மீதான குற்ற வழக்கை பலப்படுத்துவதற்காகவும், சாட்சியங்களை கூடுதலாக சேர்ப்பதற்காகவும் அவருடன் டிக் டாக் வீடியோவில் நடித்த மாணவிகள் மற்றும் இளம்பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் டிக்டாக்கில் கலக்கிய கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் இப்போது கலக்கம் அடைந்துள்ளனர்.

தொடரும் டிக்டாக் கைதுகள்
டிக்டாக் பதிவேற்றத்தால் வாலிபர்கள் கைது தொடர் சம்பவங்களாக உள்ளது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு ஆலங்குளம் காவல் நிலையம் முன்பு டிக்டாக் பாடலுக்கு ஆடி நடித்த இருவர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பாப்பாக்குடி காவல் நிலையம் முன்பு நின்று கொண்டு ‘சட்டப்படி பார்த்தா நான் குற்றவாளிதாண்டா...... நியாயப்படி பார்த்தா நான் சுத்த தங்கம் தாண்டா’ என பாடல் பாடிய மற்றொரு வாலிபரும் கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக காதல் மன்னன் கண்ணனும் டிக்டாக் போதையில் சிக்கி கைதாகியுள்ளார்.

Tags : kannan ,college students ,teenage girls , tiktok romantic king, Kannan, for charming songs, dancing, college students, beating
× RELATED நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார்...