வேலூர்: ராஜிவ்ெகாலை வழக்கில் முருகன், அவரது மனைவி நளினி, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நளினி, உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள பெற்றோரை பார்க்கும் வகையில் தன்னையும் கணவர் முருகனையும் சென்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி சிறைத்துறை ஏடிஜிபிக்கு, சிறை நிர்வாகம் மூலம் மனு அளித்துள்ளார். இந்த தகவலை அவரை நேற்று சந்தித்து பேசிய பின் அவரது வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.