சென்னை: சி.ஏ.ஏ. என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடும் எவராக இருந்தாலும் பாரபட்சமின்றி இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். சிஏஏ என்ற பெயரில் நடந்தேறும் வன்முறை, நாட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் குலைக்கும் எந்த ஒரு செயலும் இனி தொடராமல் செய்வது நமது ஒவ்வொருவரது கடமை. அரசாங்கம் பாரபட்சமின்றி வன்முறையில ஈடுபடும் எவராக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு அடக்கவேண்டும்.