சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயசந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரசு நியமித்த சிறப்பு அதிகாரி குழு தலைமையில் தற்போது தயாரிப்பாளர் சங்கம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. ஜூலைக்குள் தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.