×

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. பிப்ரவரி முதல் வாரத்தில் நீடித்து வந்த வெப்பமான நாட்கள் மற்றும் சூடான இரவுகளால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். தற்போது வங்கக் கடலில் இருந்து வரக்கூடிய கிழக்குக் காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் இருந்து வரக்கூடிய காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் எந்த பகுதிகளிலும் மழை பதிவாகவில்லை, என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Chennai ,TN ,Pondicherry , Tamil Nadu, Puducherry, Rain, Chennai Weather Center
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...