சென்னை: தமிழ் சினிமா சிறிய பிரச்சனையில் இருந்து பெரிய பிரச்சனை நோக்கி செல்கிறது பெஃப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், திரைப்படத்தின் லாபம், நஷ்டம் தயாரிப்பாளர், விநோயோகஸ்தரை மட்டுமே சாரும். திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டில் சிலர் அத்துமீறி நடந்துள்ளனர். திரைப்படத்தில் லாப நஷ்டத்தை தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தொடர்பு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.