×

பெரியார் சிலையை அவமதிக்கப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை  : தாராபுரத்தில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் மூன்று மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் பிறந்தநாளில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலைச் சாலை தீவுத்திடல் பூங்காவில் உள்ள பெரியார் சிலையின் மீது காலனிகளை வைத்துச் அவமதிப்பு செய்யபட்டது.இதுதொடர்பாக, நவீன் குமார் என்பவர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என, திராவிட கழக திருப்பூர் மாவட்ட செயலாளர் சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Tags : orders police ,Chennai High Court ,Periyar ,Periyar Idol , Tarapuram, Periyar Statue, Police, Charge Sheet, High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...