டெல்லி: தூக்கு தண்டனைக்கு தடைவிதிக்க கோரி நிர்பயா குற்றவாளி வினய் குமார் டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு தொடர்ந்துள்ளார். 4 பேரில் சிலரின் சட்ட நடைமுறைகள் இன்னும் முடியாததால் தூக்கிலிட தடைவிதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை இன்று விசாரிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.