×

வாணியம்பாடியில் புதிதாக உருவாக்கப்பட்டது தேசியக்கொடி ஏற்றாத கோட்டாட்சியர் அலுவலகம்

வாணியம்பாடி:  நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் முதல்முறையாக நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலெக்டர் சிவன் அருள் தேசியக் கொடி ஏற்றி வைத்தார். ஆனால் இம்மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியரசு தினவிழாவிற்கான எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை.

நகராட்சி அலுவலக வளாகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. ஆனால், நேற்று இந்த அலுவலகம் பூட்டியே கிடந்தது.  இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ‘மாவட்டம் உருவான பிறகு நடைபெறும் குடியரசு தினவிழா மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனால் கோட்டாட்சியர் அலுவலகம் பூட்டிக்கிடக்கிறது. தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டிய அதிகாரிகள் யாரும் அலுவலகத்திற்கு வரவில்லை. இந்த அதிகாரிகள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Office ,Vaniyambadi ,Kotakasiar , Vaniyambadi, newly created, non-flagged, Kotakasiar office
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...