சென்னை: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாநில தேர்தல் ஆணையத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. 2020ம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் ஆணையத்தில் பணியாற்றும் உயர் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.