சென்னை: குரூப் 4 முறைகேடு தொடர்பாக வட்டாட்சியர்கள் பார்த்தசாரதி, வீரராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பார்த்தசாரதி ராமேஸ்வரம் மையத்திலும், வீரராஜ் கீழக்கரை மையத்திலும் தேர்வு அதிகாரிகள் ஆவர். தேர்வர்கள் காப்பி அடிக்கவும், தேர்வு பதில் தாள் மாற்றிய குற்றச்சாட்டில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து, குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணையை தொடங்கியுள்ளது.