×

கார் விபத்தில் 2 வாலிபர்கள் பலி

சென்னை: அயனாவரத்தை சேர்ந்தவர் யுகேஷ் குமார் (29), ரெட்டேரி பகுதியை சேர்ந்தவர்  பீபின் (29), கொளத்தூரை சேர்ந்தவர்கள் யுவராஜ் (29), சித்திக் (31). நண்பர்களான இவர்கள் நேற்று அதிகாலை சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு காரில் புறப்பட்டனர். சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் புது கும்மிடிப்பூண்டி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், மேம்பால தடுப்பு சுவரில் மோதி நொறுங்கியது. இதில் யுகேஷ் குமார், பீபின் ஆகிய இருவரும் இறந்தது தெரிந்தது. படுகாயமடைந்த யுவராஜ், சித்திக் ஆகியோரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Tags : car accident , Car Accident, 2 Plaintiffs, Killed
× RELATED கார் விபத்தில் வாலிபர் படுகாயம்