சென்னை: எம்ஜிஆரின் 103வது பிறந்தநாளையொட்டி இன்று முதல்வர், துணை முதல்வர் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள். இன்று எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை 10.30 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சென்னை, கிண்டி டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள
அவரின் உருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட உள்ள படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
அவர்களை தொடர்ந்து, சட்டப்பேரவை துணை தலைவர், அரசு தலைமை கொறடா, தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி, எம்பி, எம்எல்ஏக்கள், வாரிய தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்துவார்கள்.