சென்னை: சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. விவகாரத்தில் தமிழகத்தில் எந்த சிறுபான்மை மக்களும் அச்சப்பட வேண்டியதில்லை என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. விவகாரத்தில் சில எதிர்க்கட்சி தலைவர்கள் வதந்தி பரப்புகின்றனர். கூட்டணியை பொறுத்தவரை சில இடங்களில் விட்டுத்தர வேண்டிய சூழ்நிலை உருவாகிறது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.