தாம்பரம்: அகில இந்திய வேலை நிறுத்தத்தை முன்னிட்டு ஏஐசிசிடியு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூடுவாஞ்சேரியில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. அப்போது மாநில சிறப்பு தலைவர் இரணியப்பன் தலைமையில் நேற்று மதியம் ரயில் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். உடனே 100க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதேப்போல, தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை-காந்தி சாலை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து விடுவித்தனர்.