மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியிட்டெண் சென்செக்ஸ் 527 புள்ளிகள் உயர்ந்து 41,204 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியிட்டெண் நிஃப்டி 151 புள்ளிகள் அதிகரித்து 12,144 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. 2 நாட்களாக சுமார் 1000 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ் இன்று ஏற்றம் கண்டுள்ளது. வர்த்தக தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 22 காசு அதிகரித்து ரூ.71.71 ஆக உள்ளது.