×

சிகரெட் வாங்கிய பணம் தராத தகராறு கடைக்காரருக்கு கத்திக்குத்து: 2 பேருக்கு வலை

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை பட்டேல் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் நாராயணன் (35). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த சையத் (28) மற்றும் அவரது   நண்பர் அருண்குமார் (27) ஆகியோர், இந்த கடைக்கு வந்து, சிகரெட் வாங்கினர். அதற்கான பணத்தை நாராயணன் கேட்டபோது, தர மறுத்து இருவரும் தகராறில் ஈடுபட்டனர். பின்னர், சையத் மறைத்து வைத்திருந்த கத்தியால், நாராயணனின் இடது மார்பில் குத்தினார். பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். நாராயணனின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.

Tags : dispatcher , Cigarette, money, dispute, shopkeeper, screamin
× RELATED வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு...