×

சென்னையில் 7ம் தேதி பாஜ பேரணி

சென்னை: குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய நகரங்களில் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் சென்னையில் 7ம் தேதி பேரணி நடத்தவுள்ளதாக தாம்பரத்தில் தமிழக பாஜ செயலாளர் ராகவன் கூறினார். தாம்பரம் அடுத்த சேலையூர் - அகரம்தென் பிரதான சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று காலை பத்திரிகையாளர்களிடம் பாஜக தமிழக செயலாளர் கே.டி.ராகவன் கூறியதாவது:

‘‘பாஜக தேர்தல் அறிக்கையில் சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வருவதாக வாக்குறுதி தெரிவித்திருந்தோம். அது தற்போது ஜனநாயக ரீதியில் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களிடம் தவறான பொய்யான பிரசாரங்கள் பரப்பப்பட்டு வருகிறது. இச்சட்டம் பற்றிய விழிப்புணர்வுக்காக வீடு, வீடாகச் சென்று மக்களை சந்தித்து சட்டதிருத்தம் பற்றியும் பொய்யான பிரசாரத்தை முறியடிக்கவும் முடிவு செய்துள்ளோம். மேலும் தெருமுனைக் கூட்டங்கள், பேரணிகள், சமூக ஊடகங்கள் மூலமாக சட்டத்திருத்தம் பற்றி மற்றும் பொய்யான பிரசாரம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இதில் மத்திய அமைச்சர்கள் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளனர். சென்னையில் 7ம் தேதி சட்டத் திருத்தம் குறித்து பிரமாண்ட பேரணி நடைபெற உள்ளது என்றார்.

Tags : rally ,Baja ,Chennai Baja , Baja rally on May 7 in Chennai
× RELATED பாஜ வேட்பாளர் மீது ₹525 கோடி மோசடி...