சென்னை: ரஜினியின் தர்பார் படத்திற்கு தடைகோரிய வழக்கில் லைகா நிறுவனம் நாளைக்குள் பதிலளிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.12 கோடி கடனை தரும்வரை படத்தை வெளியிட தடை விதிக்க கோரி மலேசிய நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. டிஎம்ஒய் கிரியேஷன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்தது.