×

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி பஞ்.,சில் 5 வாக்குச்சாவடிகளில் இன்று விறுவிறு மறுவாக்குப்பதிவு

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி பஞ்சாயத்துக்குட்பட்ட 5 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நாலுமாவடி பஞ்சாயத்தில் 5 வாக்குச்சாவடிகளில் ஊராட்சி தலைவருக்கான தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் சின்னங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டில் 9 சின்னங்கள் இடம் பெற்றிருந்தன. இதனால் நாலுமாவடி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு மட்டும் இந்த 5 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி நாலுாவடி சண்முகபுரம் டிஎன்டிடிஏ தொடக்கப்பள்ளி, பணிக்க நாடார் குடியிருப்பு கணேசர் மேல்நிலைப்பள்ளி, நாலுமாவடி காமராஜர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடி மற்றும் நாலுமாவடி டிஎன்டிடிஏ நடுநிலைப்பள்ளியில் உள்ள 2 வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட 5 வாக்குச்சாவடிகளில் இன்று 1ம்தேதி (புதன்) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் சந்தீப்நந்தூரி அறிவித்திருந்தார். இதையடுத்து இந்த 5 வாக்குச்சாவடிகளிலும் இன்று அதிகாலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. வாக்களித்தவர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய விதிகளின்படி வாக்காளரின் இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்பட்டது. மறு வாக்குப்பதிவையொட்டி இந்த வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags : Tuticorin District ,Nalumavadi Panch ,Re-voting , Re-voting
× RELATED கோவில்பட்டி அருகே தறிக்கெட்டு ஓடிய...