×

9 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: வாக்குச்சீட்டுகளை மாற்றி வழங்கிய காரணத்திற்காக 9 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 27ம் மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், வாக்குச்சீட்டு மாற்றி வழங்கியது, சின்னங்களே இல்லாமல் வாக்குசீட்டு அளித்தது உள்பட பல்வேறு குளறுபடிகள் அரங்கேறியது. இந்நிலையில் 2ம் கட்ட தேர்தல் நடைபெற்ற பகுதிகளில் வாக்குச்சீட்டுகளை மாற்றிய வழங்கிய காரணத்திற்காக 9 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதன்படி கடலூர் மாவட்டம் வில்லங்கப்பட்டி ஊராட்சியில் 242வது வாக்குச்சாவடி, தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி ஊராட்சியில் 67 முதல் 71 வரையுள்ள 5 வாக்குச்சாவடிகள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் தாணி கோட்டகம் ஊராட்சியில்  119வது  வாக்கச்சாவடி, தேனி மாவட்டம் உப்புக்கோட்டை ஊராட்சியில் 52வது வாக்குச்சாவடி, மதுரை மாவட்டம் வஞ்சி நகரம் ஊராட்சியின் 91வது வாக்குச்சாவடி உள்ளிட்ட 9 வாக்குச்சாவடியில் இன்று காலை 7 மணி முதல் 5 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Tags : Re-voting ,Election Commission , 9 ballots today, re-voting, EC, order
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...