சென்னை: தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் தலைவர் வேலூர் இப்ராகிம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாக அவரது மனைவி சர்தாஜ் பேகம் புகார் அளித்துள்ளார். கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். பாஜக ஆதரவாளரான வேலூர் இப்ராகிம் முத்தலாக் தடை சட்டத்தை மீறி தனக்கு அநீதி இழைத்துவிட்டதாக அவரது மனைவி குற்றம் சாடியுள்ளார்.