நெல்லை: நெல்லை கண்ணன் வீட்டு முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளதற்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லை கண்ணன் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்த காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். நெல்லை கண்ணன் வீட்டு முன் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது அநாகரியமான செயல் எனவும் கூறியுள்ளார்.