×

சித்தூர் அருகே பரிதாபம் கார் மீது பஸ் மோதியதில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

திருமலை: ஆந்திராவில் கார் மீது பஸ் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். ஆந்திராவின் ராயச்சோட்டியில் உள்ள டிரங்க் ரோடு பகுதியில் வசித்து வருபவர் முகமது ரபி. இவர் நேற்று காலை திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற தனது குடும்பத்தினருடன் வந்தார். சிகிச்சைக்கு பிறகு அனைவரும் காரில் ராயச்சோட்டி சென்று கொண்டிருந்தனர். அப்போது கே.வி.பள்ளி மண்டலம், மகால் கிராஸ் அருகே ராயச்சோட்டியில் இருந்து திருப்பதி நோக்கி வந்த அரசு பஸ், கார் மீது மோதியது.

இதில், முகமது ரபி(68), நசீத்ஜான்(60), மருமகள் காதீர்(23), இளைய மகன் ஆருண் ரஷீத்(22) ஆகிய 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயம் அடைந்த மூத்த மகன் பரீத் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து பீலேர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி கிருஷ்ணா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : persons ,bus collision Bus collision , Chittoor, pity, car, bus collision, single family, 4 people, kills
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...