×

எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு ராணுவ அதிகாரி ஒருவர் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஜம்மு காஷ்மீரின் ராம்பூர் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் நேற்று காலை 11.30 மணிக்கு அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இதேபோல் உரி, ஹஜிபீர் பகுதிகளில் சிறிய ரக குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் அத்துமீறிய இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தது.

Tags : gunman ,Pakistani ,border attack ,attack ,Border , Border, pakistan, gunman, army officer, one killed
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு