×

திருமுல்லைவாயல் அருகே ஆட்டோவில் அழைத்து சென்று மைத்துனிக்கு பாலியல் தொல்லை: அக்கா கணவர் கைது

திருமுல்லைவாயல்: ஆவடி அருகே திருமுல்லைவாயலில் வசிக்கும் மைத்துனியை ஆட்டோவில் அழைத்து சென்று சில்மிஷம் செய்த அக்கா கணவரை போலீசார் கைது செய்தனர். சென்னை, கொளத்தூர், செந்தில் நகர், முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (44). சுயதொழில்  செய்கிறார். இவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இவரது மைத்துனி சுமதி (19). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாமாண்டு படித்து வருகிறார். இவர், ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், ஸ்ரீநகர் காலனி, ராகவேந்திரா தெருவில் பெற்றோருடன் வசிக்கிறார்.

இதற்கிடையில் சமீபத்தில் சரவணன், சுமதிக்கு போன் செய்து, “உனது அக்கா சம்பந்தமாக பேச வேண்டும். உடனே வில்லிவாக்கம் ரயில் நிலையத்திற்கு வா” என அழைத்துள்ளார். இதனையடுத்து அவரும் ரயில் மூலம் வில்லிவாக்கம் ரயில் நிலையம் வந்தார். அங்கு தயாராக நின்ற சரவணன், அவரை மெரினா பீச்சுக்கு சென்று பேசலாம் என கூறியுள்ளார். ஆனால், அவர் அங்கு ஏன் செல்ல வேண்டும். வீட்டுக்கு சென்று பேசலாம் என கூறியுள்ளார். ஆனால், சரவணன் வீட்டில் உனது அக்கா இருக்கிறார். எனவே, அங்கு செல்ல வேண்டாம் எனக் கூறி சுமதியை, சரவணன் ஆட்டோவில் மெரினாவுக்கு அழைத்து சென்றார்.

மேலும், அவர் ஆட்டோவில் போகும்போது சுமதியை சில்மிஷம் செய்துள்ளார். பின்னர், சுமதி ஆட்டோவில் மெரினா வந்தவுடன், சரவணனை விட்டு, விட்டு மீண்டும் வேறு ஒரு ஆட்டோவில் ஏறி கொளத்தூரில் உள்ள அக்கா வீட்டுக்கு வந்தார். பின்னர் அங்கு அக்காவிடம் நடந்ததைக் கூறி சுமதி அழுது புலம்பினார். இதனையடுத்து, சுமதியை அழைத்துக்கொண்டு அக்கா திருமுல்லைவாயலில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். பின்னர், அவரும் சரவணனுடன் வாழ மறுத்து பெற்றோர் வீட்டிலேயே இருந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சரவணன் மாமியார் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், அவர் மனைவியை குடும்பம் நடத்த அழைத்துள்ளார். ஆனால், அவர் சரவணனுடன் வாழ மறுத்துவிட்டார். இதனால், சரவணன் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி சுமதி மற்றும் குடும்பத்தினரையும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து, சுமதி ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஷோபாராணி, எஸ்.ஐ கீதா ஆகியோர் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் சரவணனை கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Aunty ,sister-in-law , Thirumullaivaiyaval, auto, sister-in-law, molestation, sister-in-law, arrested
× RELATED தந்தையின் உடல்நிலை, சகோதரி மகள்...