டெல்லி: நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி இடையூறாக உள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் நடைபெறும் சத்தியாகிரத்தில் ராகுல் காந்தி இதனை கூறியுள்ளார். மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்தது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.