×

லஞ்சம் வாங்கினால் சவுக்கால் அடியுங்கள்: பஞ்சாயத்து தலைவர் வேட்பாளர் `பஞ்ச்’ பிரசாரம்

அரியலூர்: லஞ்சம் வாங்கினால் என்னை இந்த சவுக்கால் அடியுங்கள் என பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் சமூக ஆர்வலர் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார். அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகிலுள்ள கீழக்காவட்டாங்குறிச்சியில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சமூக ஆர்வலர் தங்க. சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். இவருக்கு கிணறு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிக்கும் இவர் கையில் ஒரு துண்டு பிரசுரமும், சவுக்கும் வைத்துள்ளார். துண்டுபிரசுரத்தில், தான் வெற்றிபெற்றால் லஞ்சம் வாங்க மாட்டேன். அப்படி லஞ்சம் வாங்கியதாக நிரூபித்தால் இந்த சவுக்கால் என்னை அடிக்கலாம் எனக்கூறி சவுக்கை சுழற்றி சுழற்றி வாக்கு கேட்கிறார். இவர் கிராமத்திற்கு வந்து விட்டால் மக்கள் வேடிக்கை பார்க்க திரண்டு விடுகிறார்கள்.

Tags : Panchayat leader candidate , Bribery, panchayat leader, candidate, campaign
× RELATED 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்