சென்னை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலை பணிகளுக்கான-உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து -ஆங்கிலம்) மற்றும் உதவி பயிற்சி அலுவலர் (செயலக நடைமுறை) பதவிகளின் 13 காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஜூன் 22ம் தேதி நடந்தது. இதில் 349 பேர் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் இப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் 38 பேரின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஜன.31ம் தேதி நடைபெறவுள்ளது.