மதுரை: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்த வினோத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் நோட்டாவுக்கு வாக்களிக்கும் வசதி உள்ளது. குறிப்பாக நாடாளுமன்றத்தில் தீர்மானங்களின் மீது ஆதரவு மற்றும் எதிர்ப்புடன் விருப்பமில்லை என்பதை தெரிவிக்க 3வது பட்டன் வசதியும் உள்ளது. சட்டகமிஷனின் 170வது பரிந்துரையிலும், தேர்தல் விதிகளை சீரமைக்க கூறியுள்ளது. ஆனால், உள்ளாட்சித் தேர்தல்களில் நோட்டாவுக்கு வாக்களிக்கும் வசதி இதுவரை ஏற்படுத்தவில்ைல. எனவே, நீதிமன்றம் தலையிட்டு உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி, அடுத்தடுத்து நடக்கும் எல்லா தேர்தல்களிலும் நோட்டாவுக்கு வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.